திங்கள், 29 மே, 2017

அரசுப் பள்ளி மாணவர்களே சிறந்து விளங்குகின்றனர் :செங்கோட்டையன் May 28, 2017

அரசு பள்ளி மாணவர்கள் தான் இந்திய அளவில் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 14 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக கூறினார். அவர்கள் கவனத்திற்கு வரும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.