புதன், 31 மே, 2017

7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்! May 31, 2017

7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!


தமிழகத்தில் 7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், திருச்சி ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
இதே போல், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்துரி, நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ஆட்சியர் ரவிகுமார் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக சுரேஷ்குமாரும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமியும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சாந்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.