செவ்வாய், 11 ஜூலை, 2017

தமிழகத்தில் ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் ஒப்புதல்! July 11, 2017


தமிழகத்தில் ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள குடும்பநல பயிற்சி மையத்தில் தொற்று நோய் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். அப்போது, டெங்கு நோய் உள்ளிட்ட தொற்று நோய் குறித்து மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பதாகவும், புனேயில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்த அமைச்சர், ரோட்டா வைரசால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க அடுத்த மாதம் 11 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் எனக் கூறினார்.