
நாடு முழுவதும் இதுவரை சுமார் 3 கோடி பேர் தங்களது பான் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போலி, 'பான்' கார்டுகளை ஒழிக்கும் விதமாக, அவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இணைப்புக்காக, வருமான வரித்துறை இணையதளத்தில், பிரத்யேக பிரிவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வரிமான வரி கணக்கு தாக்கலுக்கு, 'பான்' கார்டு- மற்றும் ஆதார் இணைப்பும் கட்டாயம் என, அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் தங்களின் பான் எண்ணுடன், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர். துவக்கத்தில் மந்தமாக இருந்த இப்பணி, தற்போது வேகமெடுத்து உள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆதார் அட்டைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. அரசியல் பொருளாதார வல்லுநர் சங்கர் ஐயர் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதில் பொதுமக்களின் பிரத்யேக அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆதார் அட்டைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் செயல்படுத்தப்படும் ஆதார் அட்டைத் திட்டத்தின் பயணம் குறித்து இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது.
போலி, 'பான்' கார்டுகளை ஒழிக்கும் விதமாக, அவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இணைப்புக்காக, வருமான வரித்துறை இணையதளத்தில், பிரத்யேக பிரிவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வரிமான வரி கணக்கு தாக்கலுக்கு, 'பான்' கார்டு- மற்றும் ஆதார் இணைப்பும் கட்டாயம் என, அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் தங்களின் பான் எண்ணுடன், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர். துவக்கத்தில் மந்தமாக இருந்த இப்பணி, தற்போது வேகமெடுத்து உள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆதார் அட்டைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. அரசியல் பொருளாதார வல்லுநர் சங்கர் ஐயர் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதில் பொதுமக்களின் பிரத்யேக அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆதார் அட்டைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் செயல்படுத்தப்படும் ஆதார் அட்டைத் திட்டத்தின் பயணம் குறித்து இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது.