ஞாயிறு, 23 ஜூலை, 2017

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் July 23, 2017


பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


கச்சத்தீவை மீட்பது ஒன்றே, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வை தரும் என்று, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில தினங்களில், மீனவர்கள் 12 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை, தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். பாக் நீரிணைக்கு அருகே, பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை அரசின் உச்சபட்ச அத்துமீறலையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசின்  இந்த நடவடிக்கைகளால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  கச்சத்தீவை மீட்பதே இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார்.  

இலங்கை சிறையில் உள்ள 72 மீனவர்களையும், அவர்களது 148 படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்வதேச கடல் எல்லை மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts:

  • தினசரி ஒரு 1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய… Read More
  • பதட்டமடைந்த மோடி.. அவமானத்தால் கூனி குறுகி பதட்டமடைந்த மோடி.. ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு லக்னோ யூனிவர்சிடி மாணவர்கள், மோடியின் முகத்திற்கு நேர் நின்று … Read More
  • முட்டாள்தனமான கருத்துப்படம்...! எங்கே குண்டு வெடித்தாலும் உடனேஒரு முஸ்லிம் பெயரையோ ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரையோ சொல்வதுவாடிக்கையாகிவிட்டதுபோல, சாதி ரீதியாக எங்கே எந்த… Read More
  • சோற்றுக்கற்றாழை இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்… Read More
  • பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! 22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம் பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்க… Read More