செவ்வாய், 25 ஜனவரி, 2022

3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

 25 1 2022 ஒரே நாளில் 50,190 வரை குறைந்து, 3 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 லட்சத்து 36 ஆயிரத்தி 842 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், இரண்டு லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 614 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/less-than-3-lakh-corona-infections.html