ஞாயிறு, 2 அக்டோபர், 2022

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு; பொய் வழக்கு போடும் போலீஸ்… கலெக்டரிடம் மனு

 

1 10 2022

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு; பொய் வழக்கு போடும் போலீஸ்… கலெக்டரிடம் மனு
Coimbatore

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

Coimbatore News in Tamil: கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். இதில் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த யேசுராஜ் என்பவர், குனியமுத்தூர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில், யேசுராஜ் குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கில் கைது செய்யபட்ட நபர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அப்போது காவல் துறை விசாரணை என்று அழைத்து சென்று பொய்வழக்கில் கைது செய்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகவும், விசாரணை என்று அழைத்து செல்லும் இளைஞர்களை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் சென்று தாக்குகின்றனர் எனவும் தெரிவித்தனர்.பொய்வழக்கில் கைது செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் முறையிட்டனர்.

மதிவதனி – கைது செய்யப்பட்ட நபரின் மனைவி
ஜெரீனா – பாதிக்கப்பட்ட மனு புகார்தாரர்
ஜொஹரா – பாதிக்கப்பட்ட மனு புகார்தாரர்

இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-petrol-bomb-incident-police-filing-false-case-victims-petition-to-dist-collector-518906/

Related Posts:

  • கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கேரளாவில் இன்று அடையாளம் தெறியாத நபரால்கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்என் அன்பு இஸ்லாமிய சகோதரிகளே ..யாரையும் நம்பியார் அலைத்தாலும் … Read More
  • இஸ்ரேல் ராணுவ யூத தீவிரவாதிகள்" "பாலஸ்தீன குழந்தைகளை சித்திரவதை செய்யும் ஆண்மையற்ற இஸ்ரேல் ராணுவ யூத தீவிரவாதிகள்" இந்த யூதர்களின் முகத்திரையை படித்ததும் பகிர்வு (SHARE) செய்து உல… Read More
  • பெண்களை பாலியல் தொந்தரவு பெண்களை பாலியல் தொந்தரவு செய்வது தற்பொது தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது. இதை சாதி மத வேறுபாடின்றி அனைவருமே கண்டிக்கவேண்டும்.  (function(d, s, id)… Read More
  • முதுகெலும்பை முறிப்போம் RSSன் முதுகெலும்பை முறிப்போம் : 'ஆப்' கட்சியின் மூத்த தலைவர் 'பிரஷாந்த் பூஷன்' பேட்டி ! வக்ப் வாரிய சொத்துக்களை மீட்கவும் உறுதி !! டெல்லியில் ஆட… Read More
  • திராணி" உடைய அரசியல்வாதி ஜெயலலிதா ஆட்சியை வானளாவ புகழ்ந்து துதிபாடிக் கொண்டிருக்கும் சோ நிகழ்ச்சியிலேயே ஜெயலலிதாவுக்கும் சோவுக்கும் சேர்த்து "ஓரு காட்டு காட்டிய" பழ. கருப்பைய… Read More