செவ்வாய், 5 ஏப்ரல், 2016

புனையப்பட்டு(307 386/1 294 304)



சகோதரர் மதுக்கூர் மைதீன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஆதரவு வெறி கொண்ட காவல்துறை கயவர்களால போலி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு பட்டு கோட்டை சப்ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மேலும் சில வழக்குகள் புனையப்பட்டு(307 386/1 294 304) பட்டுக்கோட்டை சப் ஜெயிலில் இருந்து,திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இன்றுவரையிலும்,சிறைவாசிகளுக்காக போராடுகிறோம் என்று மார்தட்டி பெருமை பேசும் எந்த இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததாக தெரியவில்லை...மதுக்கூர் மைதீன் அவர்களின் மீது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்தும் காலகட்டம் இதுவா என்று சற்று சிந்துத்து பாருங்கள்...
அதே போன்று,பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி,சகோதரர் கள்ளிடைக்குறிச்சி செய்யதலி அவர்களையும் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக காவல்துறை கைது செய்
துள்ளது.அதற்கும் பெரிதளவிற்கு எதிர்ப்புகளும்,கண்டனங்களும் வெளிப்பட்டதாக தெரியவில்லை...
சகோதரர் கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட போது,அவரை வைத்து அரசியல் செய்த அனைத்து கட்சிகளும்,செய்யதலி விசயத்தில் மயான அமைதியை கடைபிடிப்பது மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றது..
அதிமுக,திமுக போன்ற கட்சிகளை போலவே,சிறுபான்மை அரசியல் கட்சிகளும்,லாப நட்ட கணக்கில் அடிப்படையிலேயே,சிறுபான்மையினரின் பிரச்சனையை அணுகுவது மிகுந்த வெட்கட்கேடானது..

Related Posts:

  • Money Rate - INR VS Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per IN… Read More
  • வெய்யில் காலத்தில் இரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டா… Read More
  • Salah time - Pudukkottai Dist Only Read More
  • காலாவதியான சமையல் எரிவாயு சிலண்டர்களை வாங்காதீர்கள் ...!! உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா? காலாவதியான கேஸ் சிலிண்டரைப… Read More
  • முக்கண்ணாமலைப்பட்டி மக்களுக்கு ஒரு நற்ச்செய்தி நமதூர் மதினா பள்ளி அருகிள் கேஸ் சிலிண்டர்க்கான மானியம் பெருவதற்க்கான விண்ணப்பம் பூர்த்தி செய்து க… Read More