சனி, 16 ஏப்ரல், 2016

சித்த மருத்துவத்தில் அருகம்புல்


அருகம்புல்லின் ஊறல் நீரும், பாலுஞ்சேர்ந்து உட்கொள்ள கண் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவினால் சொறி சிரங்கு, படர்தாமரை குணமாகும்.
அருகின் கிழங்கால் தணியாத வெப்பமும், வாத பித்த கப நோய்களும் நீங்கும்.
உடல் பொலிவுடன் காணப்படும். அருகம் வேருடன் வெண் மிளகு பத்து வெந்நீரில் சேர்த்து வடிகட்டி உட்கொண்டால் மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, சிறுநீர்த் தாரை எரிச்சல் போன்றவை குணமாகும். தயிரில் அரைத்துக் கலந்து கொடுக்க நாட்பட்ட வெள்ளை நோய் நீங்கும்.

Related Posts: