செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மூல நோய்க்கு


நத்தை பற்பம் 20 gm,
ஜாதிக்காய் 20 gm,
கசகசா 50 gm,
கருப்பட்டி 300 gm,
தேன் 100 gm,
பால் 100 ml,
நெய் 100 gm ,
கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி கரைத்து வடிகட்டி,எடுத்து கொள்ளவும்.ஜாதிக்காய் கசகசா இவ்விரண்டையும்,தனி தனியே பால் விட்டு அரைத்து கொள்ளவும்.பிறகு இதை கருப்பட்டி பாகில் கலந்து அடுப்பில் எரிக்கவும்,நத்தை பற்பம்,தூவி ,கிண்டி கொதி வந்த பின் தேன் சேர்த்து கிளரி,பின் நெய் சேர்த்து கிண்டி இறக்கவும்.சூடு ஆறியபின் புட்டியில் பத்திர படுத்தவும்.
சாப்பிடும் அளவு :
5 முதல் 10 gm வரை உணவிற்கு முன் காலை,இரவு சுவைத்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
உள் மூலம், வெளி மூலம், கட்டி மூலம், முலை மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன கடுப்பு, எரிச்சல், அரிப்பு முதலியவை நீங்கும்.
தகவல்: கட்செவி: சித்த மருத்துவம் : மருத்துவர் தேவேந்திரன் ஐயா