(இஸ்லாத்தை இழிவுபடுத்திய தர்கா வணங்கிகள்)
எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
அப்போது ஜாமியத் உலமா தர்கா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
இவரின் உளரல் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்துள்ளது.
தர்கா வழிபாட்டில் மூழ்கியவர்களூக்கு இது ஒன்று விநோதமல்ல்.
இறைவனை மட்டும் பின்பற்றும் உண்மை முஸ்லிம்களிடத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.