வங்க கடலில் பகுதியில் அந்தமான் அருகே உருவான வர்தா புயல் சென்னை மாநகரை சுழன்று அடித்தது. இந்த புயலால் கர்நாடகாவிலும் பலத்த மழை பொழிய தற்போது வர்தா அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள வர்தா, தற்போது வங்க கடலுக்குள் வீசும் காற்றை ஈர்த்து வருகிறது. இதற்கு மேலும் வர்தா மேகக்கூட்டங்களை இழுக்கும் பட்சத்தில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்படுகிறது.
இதனால், வர்தா புயல் மீண்டும் தமிழகத்தின் தென் பகுதி வழியாக புயல் புறப்பட்ட இடமான, அந்தமானுக்கு வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
இதனையடுத்து வர்தா புயலை தொடர்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலும் வர்தா மீண்டும் வந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.