வெள்ளி, 6 ஜனவரி, 2017

முடிவாகி விட்டது சமாஜ்வாதி காங். கூட்டணி?

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் ஒன்றாக கைகோர்த்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rahul gandhi l
சமாஜ்வாதி கட்சியின் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவராக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தேர்ந்தெடுக்ப்பட்டார். சமாஜ்வாதி கட்சியின் உட்கட்சி பூசலை சாதகமாக பயன்படுத்தி பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளன.
இந்நிலையில் உ.பி.யில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு, காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து சமாஜ்வாதி கட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. வெளிநாடு சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்தியா வந்தவுடன் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்தால் அகிலேஷ் யாதவை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க தயார் என கூறியுள்ளார்.

Related Posts: