வியாழன், 23 மார்ச், 2017

பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! March 23, 2017

பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 19 பேரை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என அத்வானி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை ஏற்றுகொண்ட நீதிமன்றம், இரண்டு வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும் இந்த வழக்கில் தங்கள் வாதங்களை தாக்கல் செய்யவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Posts:

  • Jobs Need Software Developer ( Delphi, PHP , ASP.net ) Posted on: 7/16/2013 1:56:32 PM urgently required software developer (Delphi, PHP. ASP.Net) 2-5 y… Read More
  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
  • தொடரும் கொலை தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சி… Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More