ஞாயிறு, 21 மே, 2017

இந்தியாவை உலுக்கும் மாபெரும் இயற்கை பேரிடர்: உத்தரகாண்ட்டில் கடும் நிலச்சரிவு : 15,000 சுற்றுலாப் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தவிப்பு..!


பத்ரிநாத் செல்ல முடியாமல் விஷ்ணு பிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுமார் 60 மீட்டர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மக்களை மீட்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.
குறிப்பாக, பத்ரிநாத்திலுள்ள சிதைபொருள்களை அகற்றுவதற்கு, குறைந்தது இரண்டு நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: