பத்ரிநாத் செல்ல முடியாமல் விஷ்ணு பிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுமார் 60 மீட்டர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மக்களை மீட்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.
குறிப்பாக, பத்ரிநாத்திலுள்ள சிதைபொருள்களை அகற்றுவதற்கு, குறைந்தது இரண்டு நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.