ஞாயிறு, 21 மே, 2017

அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கணினி வழியாக கற்பிக்கும் திட்டம் May 21, 2017




அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல்  கணினி வழியாக கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என, பள்ளிகல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்தறை சார்பில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், திண்டுக்கல், கரூர், கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 635 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழா, திருச்செங்கோட்டில்  நடந்தது. 

பள்ளிகல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்கி பேசினார். அடுத்த ஆண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடை வண்ணங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் அறிவித்தார். 

மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கும் என கூறிய அவர், 6ம் வகுப்பு முதல் கணினி வழியாக கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் தெரிவித்தார்.