வெள்ளி, 19 மே, 2017

கண்டன ஆர்ப்பாட்டம்

சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்
தயவு செய்து இந்த ஆண்டு யாரும் முஸ்லிம்கள் கிறிஸ்த்தவர்கள் யாரும் படிக்க வேண்டாம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் !
தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி
இடம்:தஞ்சை இரயிலடி.
தஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட போலீசைக் குவித்தும், பயிற்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை–திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தினர் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்காமல் அதற்கு 400-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது
(மேலும்)