திங்கள், 15 மே, 2017

ஏரியைத் தூர்வாரக் கோரிப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! May 15, 2017

ஏரியைத் தூர்வாரக் கோரிப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!


திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள ஏரியைத் தூர்வாரக் கோரிப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள ஏரியைத் தூர் வாரக் கோரிப் பொதுப்பணித்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குப் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏரியைப் பொதுமக்களே தூர்வார அனுமதி அளிக்கக் கோரி ஏரியின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியனும் கலந்துகொண்டார்.