புதன், 5 ஜூலை, 2017

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு July 05, 2017

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு


மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா,  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தன்னிடம் தொலைபேசியில் ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பேசியதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் போன்றும், அச்சுறுத்தும் தொனியிலும் ஆளுநர் பேசியதாக மம்தா பானர்ஜி கூறினார். 

அவரது பேச்சு, அவமதிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும், அவ்வாறு பேசக் கூடாது என ஆளுநரிடம் தான் கூறியதாகவும், மம்தா பானர்ஜி தெரிவித்தார். முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறும் சூழல் வந்து விட்டதோ என்ற எண்ணத்தை ஆளுநரின் பேச்சு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, யாருடைய கருணையாலும் தான் முதலமைச்சராக இல்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பதையும், நியமிக்கப்பட்டவர் தான் என்பதையும் ஆளுநர் உணர வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். 

Related Posts:

  • கொய்யா பழம் நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு ப… Read More
  • ஆச்சரியப்படும் உண்மைகள்: 1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3. டைட்டானிக்… Read More
  • அறிந்து கொள்வோம்..... * மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம். * 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம். * நத்தைகள்… Read More
  • இருதய இரத்தக் குழாய் அடைப்பு இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரியமூலப்பொருள்கள்:1 கப் எலுமிச்சை சாறு1 கப் இஞ்சிச் சாறு1 கப் பூண்டு சாறு1 கப் ஆப்பிள் … Read More
  • குடும்ப அட்டை குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும்… Read More