30 7 23
நாட்டில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது:
கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது. மே 2014-ல் இருந்து திறக்கப்பட்ட விமான நிலையங்களில் 11 மட்டுமே செயல்படுகின்றன. விமானங்கள் வந்து செல்லாததால் 74 விமான நிலையங்களில் 15 விமான நிலையங்கள் இயங்குவதே இல்லை.
பாஜக தலைமையிலான மத்திய அரசு 479 புதிய பாதைகளை அறிமுகப்படுத்தியது. இவற்றில் 225 செயல்பாட்டில் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் ஓரளவு உண்மையாகவும், பெரும்பாலும் பொய்யாகவும் தான் இருக்கிறது. பெருமை மற்றும் மிகைப்படுத்தலுக்கான அடையாளமாக தான் மத்திய அரசு செயல்படுகிறது.” இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த மத்திய விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அரசின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையங்கள் குறித்து விரிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் கூறியிருப்பது:
“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாங்கம் 74 விமான நிலையங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சில பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவை பல தசாப்தங்களாக தேசிய பொறுப்பில் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ 75,000 கோடி செலவில் இந்த விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது.
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். முந்தைய அரசுகள் 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில் சாதித்துள்ளனர். உண்மையை சரிபார்ப்பதற்கு தற்போதைய காங்கிரஸ் வலுவானதாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தயவு செய்து அரைகுறை உண்மைகளை நிலைநிறுத்த வேண்டாம்” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
source https://news7tamil.live/the-central-government-is-lying-about-opening-74-airports-in-7-years-b-chidambarams-accusation.html






மோடி தலைமையிலான பாஜக அரசு எரிபொருள்களின் விலையை 35% குறைக்க வேண்டும். எரிபொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பொருளாதார அளவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. எரிபொருள்கள் விலையேற்றத்தின் மூலம் மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை மத்திய அரசு அவர்களிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இவர்களோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கவ்ரவ் கோகாய், பீகாரில் இருந்து ஜனதா தள் கட்சியை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் கட்ஜ், மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், பௌலோ தேவி நெடாம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜவாத் அலி கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த எம்பிக்கள் குழு இன்று பாதிக்கப்பட்ட மக்களையும், நாளை மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்கின்றனர். மணிப்பூர் சென்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது. மணிப்பூர் சென்றுள்ள எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்பி கவுரவ் கோகாய் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் இன்று கலவரத்தால் மணிப்பூர் மக்களை சந்தித்தனர்.