திங்கள், 31 ஜூலை, 2023

மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தொல். திருமாவளவன்

 30 7 23

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூக மக்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகின.
சம்பந்தப்பட்ட பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் வன்புணர்வு செய்தனர் என்றும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், மணிப்பூர் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிக் குழுவினர் 2 நாள் பயணமான சென்றனர்.

தொடர்ந்து, அவர்கள் இன்று (ஜூலை 30) டெல்லி திரும்பினர். இதையடுத்து, மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.


அப்போது, “தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர்; தங்கள் வேதனைகளை கூறினார்கள்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பு மக்களும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-returned-to-delhi-from-manipur-731767/