சனி, 21 அக்டோபர், 2023

41 தூதர்களை திரும்ப பெற்ற கனடா: இந்தியாவில் விசா, தூதரக சேவைகளும் நிறுத்தம்

 Canada pulls diplomats from India halts visa and consular services Tamil News

டெல்லியின் உள் விவகாரங்களில் கனடா தூதர்கள் தொடர்ந்து தலையிடுவதாவும், அவர்களைக் குறைக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.

canada | india: கனடாவின் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், கனடா - இந்தியா இடையான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கனடாவுக்கான இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார். இதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் உலக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதுடன், கனடா இப்போது சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு தூதரகங்களில் விசா மற்றும் தூதரக சேவைகளை நிறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் மட்டும் சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பை கனட வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்களை இந்தியாவிலிருந்து  திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் டெல்லியில் உள்ள 21 கனட தூதர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தூதரக விலக்குகளை நெறிமுறையற்ற முறையில் அகற்றும் திட்டத்தை இந்தியா முறையாகத் தெரிவித்துள்ளது. அதாவது 41 கனட தூதர்களும் அவர்களைச் சார்ந்துள்ள 42 பேருக்கும் குறிப்பிட்ட தேதியில் பாதுகாப்பு பறிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். மேலும் இது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும்.

இந்தியாவிலிருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு கனடா வசதி செய்துள்ளது. இந்தியாவின் முடிவு இரு நாடுகளிலும் உள்ள தூதரகங்களுக்கான சேவைகளின் அளவை பாதிக்கும். துரதிர்ஷ்டவசமாக, சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள எங்கள் துணைத் தூதரகங்களில் உள்ள அனைத்து நபர் சேவைகளுக்கும் இடைநிறுத்தம் செய்கிறோம். தூதரக உதவி தேவைப்படும் கனடர்கள் டெல்லியில் உள்ள நமது தூதரகத்திற்கு செல்லலாம். தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமும் உதவியை நாடலாம்.”என்று அவர் கூறினார்.

முன்னதாக, கனடா தூதர்கள் நாட்டில் இருப்பதால் இந்தியாவின் கவனம் 'சமநிலை' அடைவதாகவும், டெல்லியின் உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவதாவும், அவர்களைக் குறைக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இங்கே தூதர்கள் இருப்பு அதிகம் இருப்பதாலும், நமது உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவதைக் கருத்தில் கொண்டும் அந்தந்த தூதரக முன்னிலையில் நாங்கள் சமத்துவத்தை நாடியுள்ளோம். இதை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கனட தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது இந்தியாவில் உள்ள கனடா தூதராகத்தால் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையில் குறைவதைக் காண முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, "கனட தரப்பைப் பொறுத்தது, அவர்கள் தூதராகத்தில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கிறார்கள். எங்களது கவலைகள் தூதர்கள் இருப்பில் சமத்துவத்தை உறுதி செய்வதோடு தொடர்புடையது” என்று கூறினார். 

விசா மந்தநிலை

கனடா அதன் தூதர்களை திரும்ப பெற்றுள்ளது கனடாவிற்கான இந்திய விசா விண்ணப்பங்களின் குறிப்பிடத்தக்க மந்தநிலைக்கு வழிவகுக்கும். குறிப்பாக பல்வேறு கனட பல்கலைக்கழகங்களில் படிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் அபாயம் உள்ளது. விசா செயலாக்கத்திற்கு பொறுப்பான குடிவரவு, அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை (IRCC), இந்தியாவில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 27 இல் இருந்து 5 ஆக குறைப்பதாக தெரிவித்துள்ளது. 2022 ல், கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த நாடாக இந்தியா இருந்தது.

இந்தியாவில் உள்ள கனடாவை தளமாகக் கொண்ட ஐஆர்சிசி ஊழியர்கள் நாட்டில் தேவைப்படும் அன்றாட வேலைகளைச் செய்வார்கள் என்று கனட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் 5 ஐஆர்சிசி ஊழியர்கள், அவசரச் செயலாக்கம், விசா அச்சிடுதல், இடர் மதிப்பீடு மற்றும் முக்கிய கூட்டாளர்களை மேற்பார்வையிடுதல் போன்ற உள்நாட்டில் இருக்க வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

"இந்தியாவில் கனட தூதரக ஊழியர்கள் குறைவதால், இந்திய குடிமக்கள் ஒட்டுமொத்த செயலாக்க நேரங்கள், விசாரணைகளுக்கான பதில்கள் மற்றும் விசாக்கள் அல்லது கடவுச்சீட்டுகளை திரும்பப் பெறுவதில் தாமதங்களை எதிர்கொள்வார்கள்." என்று ஐ.ஆர்.சி.சி தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து விண்ணப்பங்களை ஏற்றுச் செயலாக்குவது தொடரும் என்றாலும், குறைக்கப்பட்ட பணியாளர்கள் செயலாக்க நேரங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/canada-pulls-diplomats-from-india-halts-visa-and-consular-services-tamil-news-1564854

Related Posts:

  • செல்போன் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல… Read More
  • Jobs (15/08/2013) Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஆகஸ்ட்-9 முதல்… Read More
  • ATM /BANK ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வா… Read More
  • MKPatti- New Road Read More
  • கருத்து சுதந்திரம் காணவில்லை… காணவில்லை… விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து ச… Read More