வெள்ளி, 13 அக்டோபர், 2023

முடக்கப்பட்ட முரசொலி பேஸ்புக் பக்கம் – முற்றிலுமாக நீக்கம்..!

 

12 10 2023

திமுகவின் முரசொலி நாளிதழ் முகநூல் பக்கத்தை முடக்கி ஆபாச படங்களை
வெளியிட்ட நிலையில் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி.  இந்த நாளிதழின் முகநூல் பக்கம்
அக்டோபர் 4 ஆம் தேதி இரவு முடக்கப்பட்டது. மேலும் அதில் சைபர் கும்பல் ஆபாச
படங்களை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முரசொலி நிர்வாகத்தினர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து முரசொலி நாளிதழின் பொது மேலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், “எங்களது ‘முரசொலி நாளிதழ்”
தினசரி தமிழ்நாடு முழுவதும் வெளிவருகிறது.   04.10.2023 இரவு 10 மணியளவில்
முரசொலி முகநூல் (Facebook)-ஐ Hackers மூலம் முடக்கப்பட்டு விரும்பத்தகாத
புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அத்துடன் 200 டாலர்கள் எனக்கு அனுப்பிவையுங்கள் நாள் உங்களுடைய முகநூல்
அக்கவுன்ட்-ஐ (Facebook Account) திருப்பி தருகிறேன் என்று குறுஞ்செய்தி
மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம்
போலீசார் விசாரணை நடத்தினர். திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி பக்கம் முற்றிலுமாக பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது.  புகார் அளிக்கப்பட்ட பிறகும் முரசொலி பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஹேக்கர்களால் ஆபாச புகைப்படங்கள் பதிவிடும் வண்ணம் இருந்தது. தற்போது முற்றிலுமாக பேஸ்புக்கில் இருந்து முரசொலி பக்கம் நீக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/disabled-ringtone-facebook-page-completely-deleted.html