ஞாயிறு, 22 அக்டோபர், 2023

காஸாவுக்கு உதவிகள் வழங்கும்பொருட்டு எகிப்து எல்லையான ரஃபா எல்லை திறப்பு!

 காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும்பொருட்டு காஸா- எகிப்து எல்லையான ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும்பொருட்டு காஸா- எகிப்து இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எகிப்து எல்லையில் உணவு, மருந்துகளுடன் காத்திருந்த 7 டிரக்குகள் முதற்கட்டமாக காஸாவுக்குச் சென்றன. பல்வேறு நாடுகளிலிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப்பொருள்கள் 200-க்கும் அதிகமான டிரக்குகளில் அணிவகுத்து நின்றுள்ளன.

இதனிடையே அங்கு தங்கி உள்ள வெளிநாட்டவர் ரஃபா எல்லை வழியாக வெளியேறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. .


source https://news7tamil.live/egypt-opens-rafah-border-for-aid-to-gaza.html