ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர். பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர். இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது. ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை. 2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது. இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன. “ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள். முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா? (நன்றி: சமரசம் http://www.samarasam.net/ via:http://www.valaiyugam.com/ |
திங்கள், 8 ஏப்ரல், 2013
Home »
» உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!
உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!
By Muckanamalaipatti 11:09 PM
Related Posts:
ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-ஷாட் தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவில் ஆரம்பம் Johnson Johnson single dose covid 19 vaccine Tamil news : இந்தியாவில் தடுப்பூசிகள் கிடைப்பதை அதிகரிக்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிய… Read More
மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கும் – ப.சிதம்பரம் எச்சரிக்கை உலக நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி வரு… Read More
டூவீலரில் வாக்குப்பதிவு எந்திரம் கடத்தலா? சென்னையில் சிக்கிய 2 பேரிடம் விசாரணை சென்னையை அடுத்த வேளச்சேரியில் வாக்கு எந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை கண்ட பொதுமக்கள், அவர்களை காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.ச… Read More
பணத்தில் மிதப்பதுதான் தமிழ் தேசிய அரசியலா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிகழ்ச்சிக்காக சேலம் சென்றபோது கட்சிக்காரர்களை நட்சத்திர ஹோட்டலில் 14,000 ரூபாய் ஒரு நாள்… Read More
நெட்-ஜீரோ என்றால் என்ன? இந்தியா வைக்கும் முக்கிய கருத்துகள் யாவை? What is net-zero, and what are India’s objections? : அமெரிக்காவின் காலநிலை மாற்ற சிறப்பு தூதர் ஜான் கெர்ரி தற்போது மூன்று நாள் பயணமாக இந்தியா வந… Read More