செவ்வாய், 20 அக்டோபர், 2015

சாகித்ய விருதை திருப்பியளித்தோரின்

சாகித்ய விருதை திருப்பியளித்தோரின்
முகத்தில் கரியைப் பூசாதீர்கள் கவிக்கோவே!
நாட்டில் உள்ள இலக்கியவாதிகள் எல்லாம் மத சகிப்புத் தன்மையற்ற மத்திய பாஜக அரசிடம் தங்களின் சாஹித்ய விருதுகளை திருப்பியளித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்! மோடியின் முகத்தில் கரியைப் பூசுகின்றனர் !
கவிக்கோ அவர்களே ! நீங்கள் விருதைத் திருப்பித் தந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை !
சகிப்புத்தன்மையற்ற சங்க பரிவாரின் அங்கமான தமிழிசையை, இல,கணேசனை உங்கள் பவள விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததன் மூலம் சாகித்ய விருதைத் திருப்பியளித்த சக எழுத்தாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டீர்கள் !
இவர்கள் வந்து உங்களைவாழ்த்தவில்லை என்றால் உங்கள் பவளவிழா சிறக்காதா என்ன?
பாஜக கலந்து கொள்ளும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் எனும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமாருக்கு இருக்கும் உணர்வு கூட உங்களுக்கு இல்லை என்பது வருத்தமளிக்கிறது !