புதன், 28 அக்டோபர், 2015

வெட்கப்படுங்கள் ! வெட்கப்படுங்கள் ! வெட்கப்படுங்கள் ! வெட்கப்படுங்கள் ! வெட்கப்படுங்கள் !

காவிக் கயவர்கள் வெட்கித் தலை குனியட்டும்!
முஸ்லிம் என்பதற்காக கருவிலே இருக்கும் குழந்தையைக் கூட கிழித்தெடுத்து கொன்ற கயவர்களே ! வெட்கப்படுங்கள் !
பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்காக கடந்தவாரம் ஒரு குடும்பத்திற்கு மகாராஷ்ட்ராவில் தங்குவதற்கு அறை கொடுக்க விடாமல் வீதியில் தவிக்க விட்ட வீணர்களே ! வெட்கப்படுங்கள் !
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவில் கருப்புமை வீசிய காவிக் கயவர்களே உங்கள் முகங்களில் வழியும் கருப்பு மையை துடையுங்கள் !
காஷ்மீர் பெண்களை கற்பழிக்கும் இந்திய பாதுகாப்புபடையினர் இந்தப் பெண்ணை பாதுகாத்த பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீர்களை பார்த்து வெட்கப்படட்டும்!
வாளின் மூலம் இஸ்லாத்தை பரப்பினார்கள் என வாய் கூசாமல் கூறும் வக்கிரமனம் படைத்தோரே! வெட்கப்படுங்கள் !
ஏழுவயதில் கிடைத்த பெண்ணை அதுவும் வாய் பேசமுடியாத பெண்ணை இந்துவாகவே வளர்த்து, கன்னிப் பெண்ணாக மாசுமருவற்று ஒப்படைத்துள்ள மனிதநேயத்தை போற்றாவிட்டாலும் பரவாயில்லை தூற்றாமல் இருங்கள் !
-செங்கிஸ்கான்
செய்தியின் சாரம்:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற வாய் பேச முடியாத, காது கேளாத பெண் 7 வயது சிறுமியாக இருந்தபோது தன் பெற்றோருடன் சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் ரெயி லில் பயணம் செய்தார்.எதிர்பாராதவிதமாக பெற்றோரிடம் இருந்து பிரிந்த அவர் வழி தவறி அதே ரெயிலில் பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலை யத்துக்கு சென்று விட்டார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கீதாவை மீட்டு அங்குள்ள எதி எனும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். 7 வயதில் அந்த அமைப்புக்கு சென்ற கீதாவுக்கு தற்போது 25 வயது ஆகிறது. அவர் இன்று இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார் !
எதி அமைப்புக்கு நன்றி தெர்வித்து ஒரு கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!
- கீதாவுடன் மோடி