திங்கள், 19 அக்டோபர், 2015

ஸ்மிரீதி இரானியிடம் இருந்து பட்டம் பெறுவதற்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்ற மாணவர் சமீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் மதவாத அரசுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ.பட்டம் வாங்க காஷ்மீர் மாணவர் ஒருவர் முகத்தில் கரி பூசிய மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கவுள்ளார்.
இந்த நிலையில் ஸ்மிரீதி இரானியிடம் இருந்து பட்டம் பெறுவதற்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்ற மாணவர் சமீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள சமீர், ''நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை கண்டித்து போராடும் 41 எழுத்தாளர்கள் தங்களது விருதினை திருப்பி அனுப்பி உள்ளனர். முதுகலை பட்டம், மிகவும் மதிப்புமிக்கது. ஆனாலும், சகிப்புத் தன்மை அற்ற இந்த அரசை எதிர்க்கும் விதமாக 19ம் தேதி “பட்டமளிப்பு நாள்” நான் பட்டத்தை ஏற்க போவதில்லை” என்று தெரிவித்து உள்ளார்.
கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை, தாத்ரி சம்பவம் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக எழுதும் எழுத்தாளர்கள் மிரட்டப் படுதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருது பெற்ற எழுத்தாளர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.