வெள்ளி, 30 அக்டோபர், 2015

போலி பெண்ணுரிமை பேசுபவர்

பிறந்த சில வினாடிகளில் நாய்க்கு இரையான சிசு.
நெஞ்சை பதற வைக்கும் படம்....இந்த கொடூரத்துக்கு காரணம் இரண்டு.
முதல் காரணம்:
பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அந்நிய ஆண்களுடன் நெருங்கி பழகுவது. முறையற்ற உறவின் மூலம் குழந்தையை பெறுவது. பிறகு அவமானத்துக்கு பயந்து பிறந்த குழந்தையை நாய்களுக்கு இரையாக்குவது.
இரண்டாவது காரணம்:
பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அதை இது போல் தூக்கி எறிவது. இதற்க்கு காரணம் பிரசவ செலவு, பெயர் வைக்க செலவு, பூப்புனித நீராட்டு விழாவுக்கு செலவு, கலயாணத்துக்கு செலவு, வளைகாப்புக்கு செலவு, பேரக்குழந்தைகளுக்கு செலவு, இப்படி பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு எண்ணற்ற செலவுகள். செலவு செய்ய முடியாதவன். பிறக்கும் போதே அந்த பெண் குழந்தைக்கு முடிவு கட்டுகிறான்.
ஆக போலி பெண்ணுரிமை பேசுபவர்களும், வரதட்சணை வாங்கியவர்களும், வாங்க முடிவு செய்து இருப்பவர்களும் இந்த படத்தை பார்த்து பரிதாபப்பட அருகதை அற்றவர்கள். இந்த கொடுமைக்கு முழு காரணமே நீங்கள் இருவர்களும் தான்.
தமீம் அன்சாரி's photo.