செவ்வாய், 20 அக்டோபர், 2015

வடகிழக்கு பருவ மழை கால தாமதமாக தொடங்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம்


வடகிழக்கு பருவ மழை இந்த வருடம் கால தாமதமாக தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் அதிகளவிலான மழை வீழ்ச்சியை தமிழகம் பெறுகிறது.கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில்,இந்த ஆண்டு போதுமான மழை பெய்யுமா என்ற கேள்வி அனைத்து மக்களிடம் இருந்து வருகிறது.


இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில்,பிலிப்பைன்சில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தால் இவ்வருடம் சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.