வெள்ளி, 24 ஜூன், 2016

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)


அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்.
காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்.
மருக்கள் மீது பூச அவை உதிரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து).