புதன், 29 ஜூன், 2016

இங்கே காவிகளின் விதை ஒருபோதும் விதைக்காது.



தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு அந்த செயலை செய்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை செய்ய நினைத்தான். அன்று மவுண்ட் பேட்டன்,நேரு போன்றவர்கள் அவன் முஸ்லிமல்ல என்று கூறினார்கள்.இன்று சகோதரி சுவாதி கொலைக்கு பிலால் மாலிக் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து ஒய்.ஜி. மகேந்திரன் பதிவுக்கு இன்றைய பெரியாரின் தொண்டர்கள் பதிவும் போட்டுள்ளார்கள் தங்கள் முகநூலில் நன்றி மணிகண்டன்.
இது தந்தை பெரியார்,பெருந்தலைவர் காமராஜர்,கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ,பேரறிஞ்சர் அண்ணா போன்றவர்களின் மண்.இங்கே காவிகளின் விதை ஒருபோதும் விதைக்காது.
ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற சிந்தனையாளர்களுக்கு இது ரமலான் மாதம் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு சென்று பாருங்கள் நோன்பு திறக்க காச்சப்படும் கஞ்சி முஸ்லிம்கள் 6:30 மணிக்கு சாப்பிட்டால் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு 4:30 மணிக்கு கொடுப்பட்டு அவர்கள் சாப்பிடுவார்கள்.அதில் சந்தோசம் கொள்பவர்கள் முஸ்லிம்கள். தான் சாப்பிட்டாலும் பிறருக்கு கொடுத்து சாப்பிடுவது முஸ்லிம்களின் குணம். இதை சென்னை மழையில் உலகமே கண்டது.