புதன், 29 ஜூன், 2016

தவறை நியாயப்படுத்தும் Y.G.மகேந்திரன் - காணொளி.....!!


சுவாதி தலித் பெண்ணாக இருந்திருந்தால் அனைவரும் போராடியிருப்பார்கள், சுவாதி பிராமண பெண் என்பதால் யாரும் குரல் கொடுக்கவில்லை என்கிறார்,
அதே கேள்வியை நாம் திருப்பி கேட்கிறோம்....
தமிழகத்தில் எத்தனையோ தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டபோது Y.G.மகேந்திரன் குரல் எழுப்பினாரா ?
அவரே சுவாதி படுகொலையை கண்டிப்பதற்கு சுவாதி பிராமணர் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறு ஒன்றுமில்லை,
சுவாதி படுகொலையை கண்டித்திருந்தாலோ அவரது படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராடியிருந்தாலோ அதை யாரும் தவறாக சொல்ல மாட்டார்கள்.
முஸ்லிம்களும் அதற்கு பக்கபலமாக இருப்பார்கள்.
ஆனால் உண்மைக்கு புறம்பாக பிலால் மாலிக் என்று இஸ்லாமியர்களை கொலைக்காரனாக சித்தரித்ததே Y.G. மகேந்திரனின் மாபெரும் தவறு,
தம்மை நோக்கி விமர்சனம் வந்தால் அந்த விமர்சனங்களை வைத்து தமது தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
அதை நியாயப்படுத்தி பேசக்கூடாது, சப்பைக்கட்டு கட்டக்கூடாது.