திங்கள், 27 ஜூன், 2016

இந்தியாவில் அமானுஷ்யம் நிறைந்த திகிலூட்டும் சுற்றுலாத் தளங்கள்,,,

உங்களது ஆர்வத்தை தூண்டும் விசித்திரமான சிலஇடங்கள் குறித்தும், மக்கள் குறித்தும் சில விஷயங்களை கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோன்ற விசித்திரமான மர்மம் நிறைந்த பகுதிகள் இந்தியாவில் மற்றும் உலகில் உள்ளன. அதுபோன்ற புதிர் நிறைந்த பழைமையான அச்சமூட்டும் ஐந்து இடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1. ஜட்டிங்கா-அஸ்ஸாம்(பறவைகள் தற்கொலை செய்துகொள்ளும் இடம்)
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜட்டின்கா கிராமத்தில் பெரும் அளவில் பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த சம்பவம் குறிப்பாக மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிக்குள் நடக்கின்றன. கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த சம்பவம் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதிகப்படியான வெளிச்சத்தால் பறவைகள் ஈர்க்கப்படுவது ஒரு காரணம் என்றும், அதிகப்படியான காந்த புலங்களால் பறவைகள் ஈர்க்கப்படுவது மற்றொரு காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. எலும்புக்கூடு ஏரி, உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூப்கண்ட் உள்ள ஏரியின் ஓரத்தில் காணப்படும் நூற்றுக்கணக்கான மக்களின் எலும்புக்கூடுகள், அதிகப்படியான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எலும்புக்கூடுகள் அங்கு வர என்ன காரணம் என்றும், எப்படி என்பது குறித்தும் யாருக்கும் தெரியாது.
3.பங்கார்த் கோட்டை(பேய்களின் கோட்டை)- ராஜஸ்தான்
ராஜஸ்தானில் உள்ள பங்கார்த் கோட்டை பிரபலமான சுற்றுலத்தலமாக மக்களால் அறியப்படுகிறது. இங்கு பேய்கள் இருப்பதாகவும், அமானுஷ்யமான சம்பவங்கள் இரவில் நடைபெறுவதாகவும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர், சூரியன் உதிக்கும் முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் இந்த சுற்றுலாத் தளத்திற்குள் யாரும் அனுமதிக்கபடுவதில்லை. இதற்கு காரணம் இரவில் கோட்டைக்குள் செல்லபவர்கள் மீண்டும் உயிரோடு திரும்பவதில்லையாம்.
4. காந்த மலை, லடாக்(காஷ்மீர்)
ஜம்மு=காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள ஒரு மலை சாலையில், நியூட்ரல் கீரிலேயே கார் தானாக மேலே செல்கிறது. செங்குத்தான மலைப்பகுதியில் உள்ள அந்த மலைச்சாலையில் கார் தானாகவே 10 கிலோ மீட்டர் வேகத்தில் குறிப்பிட்ட தூரம் வரை தானாக மேலே செல்கிறது. அந்த மலையில் உள்ள காந்த சக்திகள் காரணமாக செங்குத்தான மலைச்சாலையில் தானாகவே கார்கள் மேல்நோக்கி செல்கின்றனவாம்.
5.டுமாஸ் பீச், குஜராத்
குஜராத்தில் உள்ள டுமாஸ் கடற்கரையை பற்றி பல்வேறு கதைகள் உலாவுகின்றன. இந்துக்களின் பிணங்கள் எரிந்த நிலையில் இந்த கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் பேய்கள் இருப்பதாகவும், அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.