வியாழன், 30 ஜூன், 2016

பொறுப்புடன் இருந்து வருகிறோம்....!!


சுவாதி படுகொலையில் காவல்துறை குற்றவாளியை அடையாளம் காணாத சூழலில் இஸ்லாமியரை தொடர்புப்படுத்தி Y.G.மகேந்திரன், SV சேகர் உள்ளிட்ட பிராமணர்களும், தமிழ்நாடு பிராமணர் சங்கமும், பாரதிய ஜனதா கட்சியிலுள்ள பிராமணர்களும் அவதூறு பரப்பி அதற்கு தக்க பதிலடிகளை நாம் கொடுத்தாலும் அவதூறு பரப்பியவர்களுக்கு தான் பதிலடி கொடுத்து வருகிறோமே தவிர பிராமண சமூகத்தை நாம் எந்த இடத்திலும் கொச்சைப்படுத்தி விடவில்லை,
இந்த விசயத்தில் முகநூல் முஸ்லிம் மீடியா மிகுந்த பொறுப்புடனே இருந்து வருகிறது.
ஏனென்றால் மனித சமூகத்தை மனித சமூகமாக தான் பார்க்க வேண்டுமே தவிர சாதிய ரீதியாக ஒருபோதும் பார்க்கக்கூடாது. இதை தான் நமக்கு இஸ்லாம் தெளிவாக போதிக்கிறது.
நம்முடைய பதிலடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மட்டி அடியாய் இருக்க வேண்டுமே தவிர சம்பந்தப்பட்டவர்களின் சமூகத்தை தாக்குவதுபோல் இருந்து விடக்கூடாது.
இதில் ஏனைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பிராமணர்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதே பாணியில் பதிலுக்கு நடந்தாலும் முஸ்லிம்களாகிய நாம் கவனத்துடனே இருக்க வேண்டும்.
RSS ஐ உருவாக்கிய 5 டாக்டர்களும் பிராமணர்கள், RSS ன் தலைவர்கள் இன்று வரை பிராமணர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் பிராமணர்கள், முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள் பிராமணர்கள்.
அதேசமயம் மாலேகானில் குண்டுவைத்து அப்பாவிகளை கொன்றது முஸ்லிம்கள் அல்ல, RSS தான் குண்டு வைத்தது என்று RSS தீவிரவாத இயக்கத்தை இந்தியாவிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய உயர்திரு ஹேமந்த் கர்கரே பிராமணர்,
முஸ்லிம் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர், அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று அறிக்கை தாக்கல் செய்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பிராமணர்,
இந்த பதிவின் படத்தில் இஃப்தாருக்கு உணவு கொடுக்கும் நபரும் பிராமணர்,
இப்படி நல்லவர்களும் இருக்கிறார்கள், இந்தியாவை இரத்த ஆறாக ஓட்ட துடிக்கும் அயோக்கியர்களும் இருக்கிறார்கள்.
நல்லவர்களை நல்லவர்களாக அடையாளப்படுத்துவோம், அயோக்கியர்களை அயோக்கியர்களாக அடையாளப்படுத்துவோம்.
சமூகம் சார்ந்த விசயங்களில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வோம்.