புதன், 29 ஜூன், 2016

Y.G.மகேந்திரனையும், மனோபாலாவையும் கைது செய்ய வேண்டும்.....!!


மும்பையில் பால்தாக்கரே உயிரிழந்தவுடன் சிவசேனா கட்சியினர் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை மிரட்டினார்கள்.
அப்போது ஒரு முஸ்லிம் மாணவி தனது முகநூலில்...
நாட்டில் எத்தனையோ பேர் தினமும் பிறக்கிறார்கள், தினமும் இறக்கிறார்கள் அதற்கெல்லாம் கடைகளை அடைக்க சொல்வது முறையா என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
அவரது பதிவுக்கு அவரது இந்து தோழி ஒருவர் Like செய்திருந்தார்.
இதனால் ஆத்திரம் கொண்ட சிவசேனா கட்சியினர் முஸ்லிம் மாணவியின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கினர்,
முஸ்லிம் மாணவியும், இந்து மாணவியும் கைது செய்யப்பட்டனர்.
சமூக வலைதளத்தின் மூலம் தனது கருத்தை சொன்ன மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இங்கோ இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக நாட்டில் மதக்கலரவத்தை தூண்டியுள்ள Y.G.மகேந்திரனையும், அவரது பதிவை நீ சரியாக தான் சொல்லியுள்ளாய் என்று மதக்கலவரத்தை தூண்டிய மனோபாலாவையும் காவல்துறை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழக காவல்துறை உடனடியாக Y.G.மகேந்திரனையும், மனோபாலாவையும் கைது செய்ய வேண்டும்.