திங்கள், 27 ஜூன், 2016

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உலக நாடுகளில் வழங்கப்படும் உச்ச பட்ச தண்டனைகள்


அனைத்து சமூகத்திலும் பாலியல் வன்கொடுமை என்பது மிக மோசமான குற்றமாக பார்க்கப்படுகிறது. எந்த தவறும் செய்யாமலே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூகத்தால் ஒருமாதிரியாக பார்க்கப்படுவதால், அவர்கள் மனரீதியான பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஏற்கனவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் தங்களை அழித்துக் கொள்ளப்பார்க்கிறார்கள்.
இத்தகைய பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுகள், கடுமையான சட்டங்களை&அமல்படுத்தியுள்ள போதிலும், குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
உலகின் முக்கிய 15 நாடுகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பார்க்கலாம்.
1. சீனா
ஒரு கட்சி ஆட்சி முறையைக்கொண்ட சீனாவில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் தண்டனையும் வழங்கப்படுகிறதாம்.
2. ஈரான்
ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
3. நெதர்லாந்து
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், பிரெஞ்ச் முத்தம் உள்பட எந்த வகையான பாலியல் குற்றங்களும், பலாத்காரமாகவே கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 4 வருடம் முதல் 15 வருடங்கள் வரை குற்றவாளிகளின் வயதை
பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்களை வன்கொடுமை செய்தால், பெரும்பாலான நாடுகள் அதை பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை ஆனால், பாலியல் தொழிலாளிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கும் 4 வருடம் சிறைதண்டனை நெதர்லாந்தில் விதிக்கப்படுகிறது.
4. பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்பவர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன்,அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவார்கள். மேலும் வன்கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளை பொறுத்து 30 வருடங்கள் கூட தண்டனை கிடைக்கும்.
5.வட கொரியா
சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை வழங்கப்படுவதில்லை.
உடனடி தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணால், பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் தலையில்
சுட்டுக்கொல்லப்படுகிறார்.
6. ரஷ்யா
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 3 வருடங்களுக்கு மேல் 30 வருடம் வரை சிறை தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு ரஷ்யாவில் வழங்கப்படுகிறது.
7.ஆப்கானிஸ்தான்
நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணால், பலாத்கார குற்றவாளி தலையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
8.நார்வே
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 4 வருடம் முதல் 15 வருடம் வரை சிறை தண்டனை
பாலியல் குற்றவாளிகளுக்கு நார்வேயில் வழங்கப்படுகிறது.
9.அமெரிக்கா
அமெரிக்காவில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என இரண்டு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. தேசிய சட்டப்படி என்றால், 30 வருடம் வரை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மாநில சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு தண்டனை மாறுடுகிறது.
10. இந்தியா
இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தொடர்ந்து தண்டனை கடுமையாகியுள்ளது. 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அரிதிலும் அரிதான பாலியல் குற்றவழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
11. சவுதி அரேபியா
சவுதி அரேபியால் பாலியல் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் சில நாட்களிலேயே பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்படுவார்.
12. எகிப்து
பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி தூக்கிலப்படுவார்.
13. இஸ்ரேல்
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு நான்கு வருடம் முதல் 16 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
14. துபாய்
துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தினால், அவர்கள் 7 நாட்களில் தூக்கிலடப்பட்டு கொல்லப்படுவார்கள்.
15. கிரீஸ்
ஐரோப்பிய நாடான கிரீஸில், பாலியல் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.