மறு பக்கம் மனித நேயத்தை நிலை நாட்டி தங்களது உயிர்களை பணயம் வைத்து தொப்புள் கொடி உறவுகளின் உயிரை காப்பற்றிய மனிதநேய மிக்க முஸ்லிம் சொந்தங்கள்....
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் பாத யாத்திரைக்கு சென்ற 21 பக்தர்களின் உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள்.இதை உலகிற்கு உரக்க சொன்ன #தினகரன் ஊடகத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துகளும் பல...
இஸ்லாமியர்கள் ஒரு போதும் தீவிரவாதத்தின் பக்கம் செல்லவும் மாட்டார்கள்....
தீவிரவாதத்தை வழி மொழியவும் மாட்டார்கள்....
தீவிரவாதத்தை வழி மொழியவும் மாட்டார்கள்....
மறுமைக்கு அஞ்சுகிற கூட்டம்,இறைவனால் படைக்கப்பட்ட ஒரு சிறு உயிரினத்திற்கு தம் கைகளால் தீங்கு ஏற்படுமாயின் அதற்காக மறுமையில்,மஹ்ஸர் மைதானத்தில் பதில் சொல்ல கூடிய நிலையில் உள்ளோம்.
உமர் ரலி அவர்கள் கூறினார்.என்னுடைய ஆட்சியிலே சாலை பராமரிப்பு இன்றி ஈராக் சாலையிலே ஒரு ஆட்டின் காலில் அடிப்பட்டாலும் அதற்காக மறுமையில் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
ஒரு ஆட்டின் மீது இரக்கம் காட்டும் எங்கள் சமுதாயம், மனித உயிர்களையா கொன்று குவிக்க போகிறது.மனித உயிர்களை கொல்லும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் மனித மாமிசம் தின்னும் பாசிச சக்திகள் அல்ல.
மனிதநேயத்தை நிலை நாட்ட துடிக்கும் பண்பாளர்கள்.
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல.
தீவிரவாதத்தை தூண்டும் போதகர்களும் அல்ல.
இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ சமூகம் ஒண்றினைந்து நட்புணர்வோடு வாழ துடிக்கும் நட்பாளர்கள்.
தீவிரவாதத்தை தூண்டும் போதகர்களும் அல்ல.
இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ சமூகம் ஒண்றினைந்து நட்புணர்வோடு வாழ துடிக்கும் நட்பாளர்கள்.

