வியாழன், 15 டிசம்பர், 2016

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு?

பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகள்‌ முடிவு செய்துள்ளதை அடுத்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவு உயர்ந்து 58 டாலரைத் தொட்டுள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவுப்பாதையிலேயே உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Posts: