Home »
» ஒரு நாள் முழுதும் இரண்டு வார்த்தைகளை கூகுளில் தேடித் திரிந்த இந்தியர்கள்! June 15, 2018
நேற்றைய தினம் (14-06-18) கூகுள் தேடுதலில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர். எதற்காக என தெரிந்துகொள்வோம்.. Fallacious மற்றும் tendentious என இரண்டு ஆங்கில வார்த்தைகள் நேற்றைய தினம் அதிகமான இந்தியர்களால் தேடப்பட்ட வார்த்தைகளாக திகழ்ந்தன.காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை கடுமையாக சாடியிருந்ததாக அந்த அறிக்கை இருந்தது.ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை கடுமையாக சாடிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்திருந்தது.இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் Fallacious (தவறான), tendentious (சார்புடைய), motivated (உள்நோக்கம்), overtly prejudiced (வெளிப்படையாக பாரபட்சம்), false narrative (தவறான விளக்கம்) ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது, பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும்விதமாகவும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது, அதன் குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வெளியுறவுத் துறையின் அந்த மறுப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த Fallacious மற்றும் tendentious என்ற அந்த இரண்டு வார்த்தைகளே கூகுளில் இந்தியர்களால் நேற்று அதிகம் தேடப்பட்ட வார்த்தகளாக அமைந்தன.
Related Posts:
மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்! September 25, 2018
பாஜக குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.சென்ன… Read More
பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவு! September 25, 2018
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாள… Read More
நந்தினியின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பாஜகவினர்! September 23, 2018
மானாமதுரையில் சமூக ஆர்வலர் நந்தினியின் தந்தை மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது … Read More
திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எ… Read More
12ம் வகுப்பு மாணவியின் உயிரை ஒரே இரவில் இரு முறை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்! September 25, 2018
ஒரே இரவில் 12ம் வகுப்பு மாணவியின் உயிரை இரு முறை ஒருவர் காப்பாற்றியிருக்கும் வினோத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த சையது நா… Read More