வியாழன், 18 மே, 2017

நீட் தேர்வில் மாணவர்களை வஞ்சித்து ஓரிரு நாட்களில் மீண்டும் மாணவர்களுக்கு அடுத்து ஆப்பு வைக்கும் மத்திய பாஜக மோடி அரசு! ‘இந்த வருடம் புதிய பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை’ – பிரகாஷ் ஜவடேகர்

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில், ‘நாடு முழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்த வருடம் அனுமதி வழங்குவதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கல்லூரிகளின் தரம்குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவற்றில், 7,000 கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அறிக்கை அளிக்காத 4,000 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் இருந்து தற்போது தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது. வரும் வருடங்களில், இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’, என்று கூறினார்.
http://kaalaimalar.in/college-no-teacher-prakash-javadekar-bjp/

Related Posts: