
உலக நாடுகளை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ‘Wannacry ransomware' எனப்படும் இணைய வைரஸ் வடகொரியாவின் மூலம் உருவாக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இதை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ், இதுவரை 3 லட்சம் கணினிகளுக்கு மேல் ஊடுருவி, அவைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. கணினிகளின் தகவல்களை அதன் உரிமையாளர்கள் எடுக்காத வகையில் 'lock' செய்து குறிப்பிட்ட தொகையை 'bitcoin' மூலம் அனுப்பிவைக்கும்படி கேட்கும் , அனுப்பாத பட்சத்தில் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுவிடும்.
இணைய உலகை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாக ‘Kaspersky’ மற்றும் Symantec உள்ளிட்ட பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. ‘Lazarus Group’ எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு கடந்த 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும்,2016ம் வங்காளதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கணினிகளை ஹாக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ‘lazarus group' உருவாக்கிய வைரஸ்களின் ‘theory'களும் தற்போது பரவிவரும் ‘‘WannaCry ransomware’ வைரஸின் ‘theory'யும் ஒன்று போலவே இருப்பதாக கணினி வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கஆள் அனைத்தையும் வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது மிகவும் கேளிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ், இதுவரை 3 லட்சம் கணினிகளுக்கு மேல் ஊடுருவி, அவைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. கணினிகளின் தகவல்களை அதன் உரிமையாளர்கள் எடுக்காத வகையில் 'lock' செய்து குறிப்பிட்ட தொகையை 'bitcoin' மூலம் அனுப்பிவைக்கும்படி கேட்கும் , அனுப்பாத பட்சத்தில் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுவிடும்.
இணைய உலகை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாக ‘Kaspersky’ மற்றும் Symantec உள்ளிட்ட பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. ‘Lazarus Group’ எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு கடந்த 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும்,2016ம் வங்காளதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கணினிகளை ஹாக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ‘lazarus group' உருவாக்கிய வைரஸ்களின் ‘theory'களும் தற்போது பரவிவரும் ‘‘WannaCry ransomware’ வைரஸின் ‘theory'யும் ஒன்று போலவே இருப்பதாக கணினி வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கஆள் அனைத்தையும் வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது மிகவும் கேளிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன் தெரிவித்துள்ளார்.