
கேரளாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற பூசாரியின் ஆணுறுப்பை பெண் ஒருவர் வெட்டி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பதிற்கு நன்கு அறிந்த அந்தநபர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த ஆணின் ஆணுறுப்பை வெட்டி எரிந்துள்ளார். படுகாயம் அடைந்த அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பெண் மீது வழக்கு பதிவு செய்யாமல், ஆண் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் தவறான செயலில் ஈடுபட முயன்றவர் பூசாரி என்பதும் 54 வயதானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பெண்ணின் செயல் துணிச்சல் மிக்க நடவடிக்கை என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு எதிராக ஆவேசத்துடன் செயல்பட்ட அவரை தான் பராட்டுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பதிற்கு நன்கு அறிந்த அந்தநபர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த ஆணின் ஆணுறுப்பை வெட்டி எரிந்துள்ளார். படுகாயம் அடைந்த அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பெண் மீது வழக்கு பதிவு செய்யாமல், ஆண் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் தவறான செயலில் ஈடுபட முயன்றவர் பூசாரி என்பதும் 54 வயதானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பெண்ணின் செயல் துணிச்சல் மிக்க நடவடிக்கை என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு எதிராக ஆவேசத்துடன் செயல்பட்ட அவரை தான் பராட்டுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்