வெள்ளி, 16 ஜூன், 2017

வங்கி கணக்கு தொடங்க இனி "ஆதார் எண்" கட்டாயம்! June 16, 2017

வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஆதார் எண் அளிக்காத வங்கிக் கணக்குகள் அனைத்தும், டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும், மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு, ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆதார் எண் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு இவ்வாறு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.