செவ்வாய், 27 ஜூன், 2017

மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழப்பு! June 27, 2017


மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழப்பு!

கர்நாடகாவில் தேயிலை தோட்டத்தில்  மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுக்கா கன்யமங்களம் கிராமத்தில்  தேயிலை தோட்டத்தில்,  தொடர் மழையால் மின்கம்பி அறுந்து கிடந்தது. இந்த மின் கம்பியை மிதித்து, இன்று  4 யானைகள்  உயரிழந்துள்ளன.  இரண்டு தாய் யானை, இரண்டு குட்டி யானைகள் என  4 யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.  மருத்துவக்குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உயரதிகாரிகள், பிரேத பரிசோதைனை செய்து, யானைகளை அடக்கம் செய்தனர். 15 நாட்களுக்கு முன் இதே பகுதியில் 2 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்து போனது  குறிப்பிடத்தக்கது.