புதன், 28 ஜூன், 2017

“கைலாஷ்-மானசரோவருக்குள் இந்திய யாத்ரீகர்கள் நுழைய அனுமதிக்க முடியாது” : சீனா June 28, 2017




சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கைலாஷ்-மானசரோவருக்குள் இந்திய யாத்ரீகர்கள் நுழைய அனுமதிக்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது.

சிக்கிம் மாநிலம் கோடா லா பகுதியில் உள்ள 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அழித்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 

இந்திய வீரர்கள் தான் எல்லை தாண்டி வந்ததாக சீனா குற்றம் சாட்டியதுடன், இது தொடர்பாக தனது எதிர்ப்பையும் பதிவு செய்தது. 

இந்நிலையில், சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கைலாஷ்-மானசரோவருக்குள் இந்திய யாத்ரீகர்கள் நுழைய அனுமதிக்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது.