செவ்வாய், 27 ஜூன், 2017

உத்தரபிரதேசத்தில் தமிழக தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சோகம் June 27, 2017

உத்தரபிரதேசத்தில் தமிழக தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சோகம்


உத்தரபிரதேசத்தில் மர்ம நபர்களால் சென்னை தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார்.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் விஜய லஷ்மி ஆகிய இருவரும் புதுமணத் தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது நண்பர் ஷியாம் தேஜாவுடன் ஹரித்துவாரில் சாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு டெல்லிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வாடகை மோட்டார் சைக்கிளில் திரும்பினர். 

முசாஃபர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் மனைவி விஜயலஷ்மி லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், கணவர் ஆதித்யா கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் இருவரையும் யார் எதற்காக சுட்டார்கள் என்பது குறித்து இது வரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் ஆதித்யா சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவர் சென்னையில் எல் அண்டி டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.