செவ்வாய், 27 ஜூன், 2017

புதிதாக வரையறுக்கப்படும் தேசிய கல்விக் கொள்கைக்கான குழு அறிவிப்பு! June 26, 2017

புதிதாக வரையறுக்கப்படும் தேசிய கல்விக் கொள்கைக்கான குழு அறிவிப்பு!


புதிதாக தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. 

இக்குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ், வேளாண் நிபுணர் ராம் ஷங்கர் குரீல், கணிதத்துறை நிபுணர் மஞ்சுள் பர்கவா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. 

இந்த குழு நாட்டின் பன்முகத்தன்மை, வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? அவற்றை சரி செய்ய எளிய இயற்கை மருத்துவங்கள் :- சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? அவற்றை சரி செய்ய எளிய இயற்கை மருத்துவங்கள் :- கை விரல்கள் போலல்லாமல் கால் நகங்கள் நிறைய பேருக்கு அழுக்கடைந்து, உடை… Read More
  • Hadis மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்… Read More
  • இந்தி வெறி மோடி அரசு. தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் … Read More
  • Quran யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி … Read More
  • பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள் மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு ரகசியமாக ச… Read More