செவ்வாய், 27 ஜூன், 2017

21ம் நூற்றாண்டுலயாவது முழுச்சுக்கோங்க பாஸ்....

​எஸ் வி சேகர் வீடியோ கேட்ட பிறகு மனம்திருந்திய பிராண்ட் ஒருத்தர் வந்து கேட்டாரு, ஆம பாசு, நீங்களே சொல்லுங்க பார்ப்பனர்கள் யாரு வம்பு தும்புக்காவது போறீங்களா, கொலை கொள்ளைனு ஏதாவது பண்றாங்களா, சாதி கலவரம் பண்றாங்களா?, அவங்களே பாவப்பட்ட ஜென்மமா ஒரு ஓரமாதானே வாழ்ந்துட்டு இருக்காங்க, 99.9% பெர்சன்ட் மார்க் எடுத்தா கூட அவங்களுக்கு சீட் கிடக்கிறது இல்லை, உண்மைதானே, ச்சே நாம ஏன் இவ்வளவு பாவப்பட்ட மக்களையே எதிர்த்துக்கிட்டு இருக்கோம்னு..
இங்க வாங்க பாஸு, இந்தியாவில் மலேகான் தொடங்கி சம்ஜாத்வா எக்ஸ்பிரஸ் என்று இதுவரை 16 குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் கீழ் இயங்கும் துணை அமைப்புகளும் தான்,
24 மணிநேரமும் இந்த நாட்டில் இந்தியர்களாக வாழும் 25 கோடி இஸ்லாமியர்களுக்கும் பலகோடி கிருத்துவர்களுக்கு எதிராக வெறி தூண்டும் விஷம பிரச்சாரத்தை செய்துவருவதும் ஆர்.எஸ்.எஸ் தான்,
உலகின் மிக கொடூரமான தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கூறியதும் ஆர்.எஸ் .எஸ்-சை தான்
அதிகமான வெளிநாட்டு அந்நிய நிதியில் செயல்படும் அமைப்பு என்று ஆய்வு முடிவுகள் சொல்வதும் ஆர்.எஸ்.எஸ்-சை தான்,
இவ்வளவு மோசமான மோசடியான அமைப்பு முழுக்க முழுக்க பார்ப்பன தலைமையில் மட்டுமே இயங்கக்கூடியதுதான், இந்த பார்ப்பன தலைமைதான் பாஜக அரசையும் வழிநடத்துகிறது சொல்லி தெரியவேண்டியதில்லை, இதுதான் எஸ்.வி சேகர் சொல்லும் வம்பு தும்புக்கு போகாதவர்கள் செய்ற வேலையா?
அடுத்து கொலை கொள்ளை பத்தி பேசுறாரா. காந்தியை கொன்றது பார்ப்பனர் இல்லையா?. சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரியார் பார்ப்பனர் இல்லையா?, ஊழல் என்று கேட்பீர்கள் என்றால் 100 கோடி ஊழல் தண்டனை பெற்ற ஜெயா யார்?.
பார்ப்பனர்கள் சாதி கலவரம் பண்றாங்களான்னு கேட்டாரா, பார்ப்பனர்களை தவிர யாரும் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று தடுத்து நிற்பது சாதி ஒடுக்குமுறை இல்லையா?. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட வந்த முதியவரை அடித்து விரட்டிய தீட்சிதர்கள் பார்ப்பனர்கள் இல்லையா?..
சரி சாதி கலவரங்களுக்கு எல்லாம் ஊற்றுக்கண்ணாக பார்ப்பனீயம் காரணம் இல்லையென்றால் மதம் மாற அனுமதிப்பது போல யாரும் எந்த சாதிக்கும் மாறிக் கொள்ளலாம் என பார்ப்பனீயம் அனுமதிக்குமா, அனுமதிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியுமா?. ஏனென்றால் அப்பாவி மக்களிடம் சாதியை கட்டிக் காப்பதில்தான் பார்ப்பனீயம் உயிர்வாழ்கிறது. இது எஸ் வி சேகருக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?..
பாவப்பட்டு ஒரு ஓரமா வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு சொல்றாரா?.. வெறும் 3% உள்ள இவர்கள் திறமை அடிப்படையில் நியமிக்கப்படாத இந்தியாவின் மிக முக்கியமான நியமன பதவிகளில் எவ்வ்ளவு அகலமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்..
ஆளுநர்களில் 30 பேர் அதில் “பார்ப்பனர்கள் 13 பேர்’’
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் பார்ப் பனர்கள் 9 பேர்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர் அதில் பார்ப் பனர்கள் 166 பேர்..
வெளிநாட்டுத் தூதர்கள் 140 பேர் அதில் பார்ப் பனர்கள் 58 பேர்
“பல்கலைகழகத் துணைவேந்தர்கள் 98 பேர் அதில் பார்ப்பனர்கள் 50 பேர்
மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் பார்ப்பனர்கள் 250 பேர்
கலெக்டர் அய்..ஏ.எஸ். அதிகாரிகள் 3,300 பேர் அதில் பார்ப்பனர்கள் 2,376 பேர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் பார்ப்பனர்கள் 190 பேர்
மாநிலங்களவை உறுப்பினர்கள் 244 பேர் அதில் பார்ப்பனர்கள் 89 பேர்
-குஷ்வந்த் சிங் (‘சண்டே’ இதழ், 23-29 டிசம்பர் 1990).
இப்படி மொத்த இந்தியாவை ஆளும் சமூகமாக இருந்துகொண்டு ஓரமாக அமைதியாக வாழ்வதாக நீலிக்கண்ணீர் வெடிப்பதை நம்புகிறீர்களா?..
அடுத்து 99.9 % மார்க் எடுத்தாலும் சீட் கிடைப்பதில்லை என்று புலம்புகிறாரா ஞாபகத்தில் இருக்கும் சிறிய தகவலை மட்டும் தருகிறேன். இந்தியாவின் மிக உயர்ந்த கல்லூரிகளில் ஒன்றான சென்னை ஐஐடி-யில் மட்டும் மொத்தம் உள்ள 450 ஆசிரியர்களில் 420 பேர் பார்ப்பனர்கள், JNU ல் சுமார் 700 பேரில் 500 பேருக்கு மேல் பார்ப்பனர்கள், முழு புள்ளிவிபரமும் எடுத்தால் எஸ் வி சேகரை செருப்பால் அடிக்க ஓடுவீர்கள்...
இதெல்லாம் விட பெரிய டாலேண்ட் என்ன தெரியுமா சாதி ரீதியாக உங்களுக்கு இவ்வளவு துரோகத்தையும் பண்ணிட்டு எதுவுமே செய்யத்தமாதிரி சாந்தமான பேசி அதை பாதிக்கப்பட்ட உங்களையே நம்ப வைக்கிற சாமர்த்தியம்தான்..
21ம் நூற்றாண்டுலயாவது முழுச்சுக்கோங்க பாஸ்....
source: FB Anbe Selva