வெள்ளி, 30 ஜூன், 2017

மதுபாட்டிலால் பெண் குத்திக் கொடூரக்கொலை! June 29, 2017




திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி குழுமணி பேரூர் பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில், பேரூர் ஊராட்சிமன்ற கட்டடத்தின் பின்புறத்தில், மாலா  மார்பு உள்ளிட்ட பகுதியில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி ஜீயர்புரம் போலீசார் பெண் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, உயிரிழந்த பெண்ணின் மார்பில் மதுபாட்டில் குத்தப்பட்டதற்கான அடையாளத்தை போலீசார் கண்டறிந்தனர். குடிபோதையில் மாலாவை பாலியல் வன்கொடுமை செய்து யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.